அஶாஸ்த்1ரவிஹித1ம் கோ3ரம் த1ப்1யன்தே1 யே த1போ1 ஜனா: |

3ம்பா4ஹங்கா1ரஸன்யுக்1தா1: கா1மராக33லான்விதா1: ||5||
1ர்ஷயந்த1: ஶரீரஸ்த2ம் பூ41க்3ராமமசே11ஸ: |

மாம் சை1வான்த1:ஶரீரஸ்த1ம் தா1ன்வித3த்4யாஸுரநிஶ்ச1யான் ||6||

அஶாஸ்த்ர-விஹிதம்--—வேதங்களால் கட்டளையிடப்படாத; கோரம்--—கடுமையான; தப்யந்தே--— செய்கிறார்கள் செய்; யே----யார்; தபஹ---துறவறங்களைச்; ஜனாஹா----—மக்கள்; தம்ப--—கபடம்; அஹங்கார--—அகங்காரம்; ஸன்யுக்தாஹா--—உடையது; காம--—ஆசை; ராக—--பற்றுதல்; பல-----வலிமை; அன்விதாஹ்—---தூண்டப்பட்டு; கர்ஷயந்தஹ----துன்புறுத்துகிறார்கள்; ஶரீர-ஸ்தம்---—தங்கள் உடலின்; பூத-கிராமம்--—உடலின் உறுப்புகளை; அசசேதஸஹ--—முட்டாள் தனமான; மாம்--—என்னை; ச--—மற்றும்; ஏவ---கூட; அந்தஹ--—உள்ளே; ஶரீர-ஸ்தம்--—உடலில் வசிக்கும்; தான்--—அவர்கள்; வித்தி---—அறிக; ஆசுர-நிஶ்சயான்—--கொடூரமான போக்கு கொண்டவர்கள்

అనువాదం

BG 17.5-6: சிலர் கடுமையான துறவறங்களைச் செய்கிறார்கள், அவை வேதவசனங்களால் கட்டளையிடப்படவில்லை, மாறாக பாசாங்குத்தனம் மற்றும் அகங்காரத்தால் தூண்டப்படுகின்றன. ஆசை மற்றும் பற்றுதலால் தூண்டப்பட்டு, அவர்கள் தங்கள் உடலின் உறுப்புகளை மட்டுமல்ல, அவர்களுக்குள் பரமாத்மாவாக வசிக்கும் என்னையும் துன்புறுத்துகிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள் தனமான மனிதர்கள் கொடூரமான போக்கு கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது

వ్యాఖ్యానం

ஆன்மிகம் என்ற பெயரில், மக்கள் அர்த்தமற்ற துறவறங்களைச் செய்கிறார்கள். பொருள் இருப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான முட்களின் படுக்கையில் படுத்துக் கொள்வது அல்லது தங்கள் உடல்களில் கூர் முனைகளை செலுத்துவது போன்ற கொடூரமான சடங்குகளை மேற்கொள்கிறார்கள். மற்றவர்கள் மாய திறன்களைப் பெற உதவும் என்ற நம்பிக்கையில் தங்களின் ஒரு கையை பல ஆண்டுகளாக உயர்த்தி வைத்து கொள்கின்றனர். சிலர் சூரியனைத் தங்கள் கண்களுக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பார்க்கிறார்கள். மற்றவர்கள் பொருள் ஆதாய கற்பனையில் நீண்ட விரதங்களை மேற்கொள்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: ‘ஓ அர்ஜுனா‘ நீ வேதத்தின் கட்டளைகளை மதிக்காமல், நம்பிக்கையுடன் வழிபடுபவர்களின் நிலையைப் பற்றி என்னிடம் கேட்டாய். கடுமையான துறவறம் செய்பவர்களிடமும் நம்பிக்கை தெரியும், ஆனால் அது சரியான அறிவின் அடிப்படை இல்லாதது என்று நான் உனக்கு சொல்கிறேன். தங்கள் உடலை துஷ்பிரயோகம் செய்து சித்திரவதை செய்பவர்கள், உள்ளத்தில் வசிக்கும் பரமாத்மாவை அவமதிக்கிறார்கள். இவை அனைத்தும் வேதத்தின் பரிந்துரைக்கப்பட்ட பாதைக்கு முரணானது.’

நம்பிக்கையின் மூன்று வகைகளை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர், இவை ஒவ்வொன்றிற்கும் உரிய உணவு, செயல்கள், தியாகம், மற்றும் தானம் மற்றும் ஏனையனவும் இப்போது விளக்குகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
17. ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency